ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
ஊரடங்கை மீறி ஊர்சுற்றியவர்கள்…! இதுவரை ரூ.15.17 கோடி அபராதம்!
Rs.15 crore collected for lockdown penalty
சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றிய 7,23,920 பேர் கைதாகி உள்ளனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் அத்யாவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதுவரை தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 7,23,920 பேர் கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 5,35,640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விதிகளை மீறியதாக இதுவரை 6,64,944 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. ரூ.15.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.