fbpx
Others

குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் பெயர்களும் ரவுடி பட்டியலில் சேர்க்கலாம்;

கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் பெயர்களும் ரவுடி பட்டியலில் சேர்க்கலாம்; கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
  கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை ரவுடிகள் ராகேஷ், பிரகாஷ் உள்பட 19 பேர் தாக்கல் செய்திருந்தார்கள். அதாவது குற்ற வழக்குகளில் ஈடுபட்டு, அந்த வழக்கில் கோர்ட்டு நிரபாரதி என்று கூறி விடுதலை செய்திருந்தாலும், தங்களை ரவுடி பட்டியலில் இருந்து போலீசார் நீக்கவில்லை, தங்களது பெயரை ரவுடி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்கள்.
  அப்போது ஒரு ரவுடி குற்றங்களில் ஈடுபட்டு, அந்த வழக்கில் கோர்ட்டு நிரபாரதி என்று விடுதலை செய்திருந்தாலும், அந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து கொண்டு, அவரது பெயரை ரவுடி பட்டியலில் இருந்து நீக்க முடியாது. ஒருவரை ரவுடி பட்டியலில் சேர்க்கும் முன்பாக போலீசார் பலமுறை ஆலோசித்தும், அதற்கான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு இருந்தால் மட்டுமே ரவுடி பட்டியலில் சேர்த்திருப்பார்கள்.
  குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலும், பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு இருந்தாலும், ஒரு நபர் மீது எந்த போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தாலும், அவரது பெயரை ரவுடி பட்டியலில் சேர்க்கலாம். வழக்கு எதுவும் இல்லாமல் குற்றங்களில் ஈடுபட்டாலும் ரவுடி தான். ஒருவர் ரவுடியாக இருந்துவிட்டு மீண்டும் குற்றங்களில் ஈடுபடமாட்டார் என்று சொல்ல முடியாது என்று நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்சித் தீர்ப்பு கூறியுள்ளார்

Related Articles

Back to top button
Close
Close