fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வான 43 எம்.பி.க்கள்…! இன்று பதவியேற்க வாய்ப்பு!

New elected RS mps may take oath today

டெல்லி:

ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பி.,க்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ்யசபாவுக்கு, 20 மாநிலங்களில் இருந்து, 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த மார்ச் முதலே, எம்.பி.,க்கள் தேர்வாகி வந்தபோதிலும், கொரோனா காரணமாக, பதவியேற்பு நிகழ்ச்சி, நடக்கவில்லை.

ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு முடிவெடுத்ததை அடுத்து, இன்று  புதிய, எம்.பி.,க்களின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டு நாடாளுமன்ற வளாகம் முழுதும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில், புதிய எம்.பி.,க்கள் அனைவரும் பதவியேற்பது சந்தேகமே என கூறப்படும் நிலையில், முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பி.,க்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags

Related Articles

Back to top button
Close
Close