நீதிமன்றம் உத்தரவுமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா. ?
தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் கேட்பாரற்று செயல்பாடு இருந்து வந்த பயணியர் நிழற்குடையானது அரசு செய்தியில் இந்த நிழற்குடை மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க வேண்டாமே உள்ளதையே செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரலாமே என்று செய்தியை பதிவிட்டதன் வாயிலாக ஏனோதானோ என்று ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்ற வேளையில் இந்த பகுதியில் கட்அவுட் கலாச்சாரம் தலைதூக்கி ஆடி வருகிறது. இந்த இடங்களில் வைக்கப்படும் கட்அவுட்கள் நகராட்சியில் முன் அனுமதி பெறாமலும், அவர்களுக்கு எப்போது மனம் வருகிறதோ அப்போது தான் கட்அவுட்களை அவிழ்ப்பார்கள்….இது பயணியர் நிழற்குடையா ? அல்லது கட்அவுட்கள் வைக்கின்ற இடமா ? யார் கட்அவுட்கள் வைக்க அனுமதி கொடுத்தது.!!! நகராட்சியா அல்லது மாவட்ட நிர்வாகமா ??? முறையாக அனுமதி பெறாமல் இந்த பயணியர் நிழற்குடையில் கட்அவுட்கள் வைக்க அனுமதி கொடுத்தது யார்….. யார்….என இப் பகுதி மக்கள் மிகவும் வியப்பாக உள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர்….. இது போன்ற கட்அவுட்கள் உரிய முறையில் அனுமதி பெற்று தான் வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ஏன் போக்குவரத்து காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும், தேனி மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்…. இனியாவது கட்அவுட் கலாச்சாரத்தில் நடவடிக்கை எடுப்பார்களா என தேனி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர் ???……………………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.