பெங்களூருவில் எம்எல்ஏ உறவினரால் மூண்ட கலவரம்..! துப்பாக்கிச்சூடு, 2 பேர் பலி!
Violence grips Bengaluru over a Facebook post
பெங்களூரு:
பெங்களூருவில் எம்எல்ஏ உறவினர் சமூகவலை தள கருத்தால் கலவரம் மூண்டுள்ளது.
பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தி. இவரது உறவினரான நவீன் என்பவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனால், நவீனுக்கு எதிராக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் பெங்களூர் டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேலும், நவீனுக்கு எதிராக சீனிவாசமூர்த்தியின் வீடு முன் நேற்று இரவு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டு கலவரம் நடைபெற்றது. டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் எல்லையில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
கலவரக்காரர்கள் தாக்கியதில் கூடுதல் காவல் ஆணையர் உட்பட 60 காவலர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து, சர்ச்சைக்கு காரணமாக இருந்த நவீன் கைதுசெய்யப்பட்டார். கலவரத்தில் ஈடுபட்டதாக 110 பேர் கைது செய்யப்பட்டனர்.