கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டிலே சிகிச்சை..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு
Tamilnadu government releases statement
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தும் அதன் அறிகுறியின்றி உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 3550 ஆகும். அவர்களில் சென்னையில் மட்டும் 1724 பேர் உள்ளனர். இந் நிலையில், சென்னையில் கொரோனா பாதித்தும் அதன் அறிகுறியின்றி உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது: அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்டோரும், கவனித்துக் கொள்வோரும் ZINC-20 mg, வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிலவேம்பு, கபசுர குடிநீரையும் 10 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.