கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட்!
IAS Sivashankar suspended in kerala
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது பல திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எம்.சிவசங்கரும் இதில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர்மட்டக்குழுவானது, இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து மூன்று நாள்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.
அந்த அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் விதிகளை மீறியதாக அந்த குழு கூறிஇருந்தது. இதனை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.