fbpx
GeneralRETamil Newsஉலகம்

8.6 கோடி குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்குவார்கள்..! யுனிசெப் ஆய்வில் தகவல்

8.6 crore children may affect poverty

ஜெனீவா: கொரோனாவால் இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளப்படக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவ் தி சில்ட்ரன் மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகளால், இந்தாண்டின் இறுதிக்குள் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளக்கூடும்.

இதனால், வறுமையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகரித்து, 67.2 கோடியாக இருக்கும். இதில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் இருப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யுனிசெப் நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா போர், குடும்பங்களிடையே நிதி நெருக்கடி குழந்தைகளை வறுமையில் தள்ளுகிறது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சேவ் தி சில்ட்ரன் தலைவர் இங்கர் ஆஷிங் கூறுகையில், குறுகிய கால பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகளின் முழு வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close