ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
#Corona டாப் டக்கரு… தமிழ்நாடு…! ஒரு சைலண்ட் சாதனை
Tamilnadu leads in corona test
சென்னை: கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் தேசிய அளவில் அதிகம் பாதிப்பு கொண்ட 3வது மாநிலமாக உள்ளது.
நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந் நிலையில் கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காரணம் இங்கு தான் அதிக ஆய்வகங்கள் உள்ளன, ஆகவே அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு உயர தொடங்கியதால், சென்னை, கோவை, சேலம், ஈரோடு, விழுப்புரம், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பரிசோதனைகள் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.