நெல்லிகுப்பம்–மணப்புரம் தங்க நகைக் கடன் மோசடி..?
மணப்புரம் தங்க நகைக் கடன் மோசடி.
பொதுமக்கள் வேதனை….
நெல்லிகுப்பம் நகர மையப் பகுதியில் இயங்கி வரும் மணப்புரம் தங்க நகைக் கடன் நிறுவனத்தில் தங்கநகைகளைஅடகுவைக்கும்வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அவர்களின் தேவைக்கு ஏற்ப திங்கள் கிழமைகளில் வட்டியுடன் பணத்தை செலுத்தி திரும்ப கேட்டால் வாரத்தின் முதல் நாள் நாங்கள் உங்களது தங்க நகைகளை திருப்பி தர இயலாது எனகடைஊழியர்கள்வாடிக்கையாளர்ளை திருப்பி அனுப்புகின்றனர்.அப்படியானால் திங்கள் கிழமைகளில் வாடிக்கையாளர்கள் வைக்கும் தங்க நகைக்குமேற்படிநிறுவனம்வட்டிபோடமாட்டார்களா? என வாடிக்கையாளர்களின் கேள்விக்கு உரிய பதில் இல்லை என வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார். மேற்படி மணப்புரம் தங்க நகைக் கடன் நிறுவனத்தார் இது குறித்து எந்த விளம்பரமும் வைக்கவில்லை என தெரிகிறது.இது போன்ற மோசடிகளில் ஈடுபடுவது சட்டத்திற்கு புறம்பாக நுகர்வோர்களை ஏமாற்றப்படுவதாகவே உள்ளது.இது போன்று நுகர்வோர்களை ஏமாற்றி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மாவட்டத்தில் இயங்கி வரும் பல்வேறு தங்க நகைக் கடன் வழங்கும் நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் நுகர்வோர்கள் எந்த விதத்திலும் பாதிக்காதவாறு துரிதமாக செயல்பட்டு மாவட்ட நிர்வாகம் செயல்படவும் நெல்லிக்குப்பம் பொதுநல கூட்டமைப்பு சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.