fbpx
ChennaiRETamil NewsTrending Nowஇந்தியாதமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் இன்றே ஊருக்கு போகலாம்..! எப்படி தெரியுமா?

Tamilnadu special trains for migrant labours

சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்காக 7 சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இருந்து இன்று புறப்படுகின்றன.

தமிழகத்தின் பல மாவட்டங்களில்  லட்சக்கணக்கான வெளிமாநில பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் இங்கேயே தவித்து வருகின்றனர்.

அவர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசின் பரிந்துரையின் அடிப்படையில் 7 சிறப்பு ரயில்கள் இன்று புறப்படுகிறது.

ஒரு சிறப்பு ரயில் பீகாருக்கும், 2 ரயில்கள் ஜார்கண்ட் மாநிலத்துக்கும் செல்கின்றன.  4 ரயில்கள் மேற்கு வங்கம் செல்கிறது. சிறப்பு ரயில்கள் சென்னை, கோவை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருந்து புறப்படுகின்றன.

அந்தந்த மாநிலங்களுக்கு செல்பவர்கள் ரயில்வே துறையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் வெளிமாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close