நெல்லை மாவட்டம் வள்ளியூர் முருகன் கோவில்–சிறப்பு செய்தி.
நெல்லை மாவட்டம்
வள்ளியூர் முருகன் கோவில் தெப்பக்குளம் விரைந்து சீரமைக்கப்படுமா?
சமூக ஆர்வலர் இ.செல்வராஜ் கோரிக்கை...
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பக்தர்களும் பொதுமக்களும் குளிக்கும் தெப்பக்குளம் கரைகள் உடைந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்ய படாமல் உள்ளது.. இதனால் வெளியே உள்ள குப்பைகளும், கழிவுகளும் கலந்து தொற்று நோய் பரவும் அபாயம் இருக்கிறது.மேலும் அவ்வழியே செல்லும் சிறுவர்கள் தவறி விழுந்து உயிர் சேதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.எனவே போர்க்கால அடிப்படையில் விரைந்து தெப்ப குளத்தின் கரைகளை சீர் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் இ.செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்
சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.