ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
அரசு ஊழியர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ தந்த முதலமைச்சர்…!
Tamilnadu government employee’s retirement extends
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.