10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள்..! தமிழக அரசு உத்தரவு!
Books for 10th and 12th students
சென்னை:
தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தகங்கள் விநியோகம் படுவதாகவும், அவ்வாறு வழங்கும் போது சமூக விலகலை பின்பற்றியே வழங்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர அறிவுறுத்தி உள்ளது. ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், மென்பொருள் பதி வேற்றத்திற்கு ஒரே நேரத்தில் அதிக மாணவர்களை வரவழைக்க வேண்டாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகவும் உத்தரவு பிறப்பித்துள்ளார், அதில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்க உள்ள மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். 1 மணி நேரத்திற்கு 20 மாணவர்களை வரவழைத்து பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்து அறிவுறுத்தி நிலையில் பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.