Others
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை–சிறப்பு செய்தி

ஆன்லைன் மோசடியில் இழந்த சுமார் ரூ 2,94,144 பணத்தை மீட்டு உரியவரிடம் (04/12/2024) ஒப்படைப்பு…
கடந்த (26/07/2023) தேதி இராணிப்பேட்டை மாவட்டம் கீழந்துறை கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமார் த/பெ பழனி என்பவர் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் (பொறுப்பு) அவர்களின் வழிகாட்டுதலின் படி காவல் ஆய்வாளர் திரு.நந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.தியாகராஜன் அவர்களின் தலைமையிலான போலீசார் இன்று (04/12/2024) ஆன்லைனில் இழந்த பணத்தை ரூபாய் 2,94,144 மீட்டு கிஷோர் குமார் த/பெ பழனி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது..