GeneralRETamil NewsTrending Nowஉலகம்
உலக நாடுகளுக்கு கொரோனா ஆபத்து…! உலக சுகாதார அமைப்பு வார்னிங்!
WHO warning about corona

ஜெனீவா:
கொரோனா வைரசால் உலக நாடுகள் ஆபத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:
அமெரிக்கா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. தற்போது புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம்.
கொரோனா அதிவேகமாகவே பரவி வருகிறது. ஆகையால் முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, கை கழுவுதல் ஆகியவை தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கொரோனா தாக்குதல் தொடர்பாக உலக நாடுகள் மிக, மிக கவனமாக, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. அது ஒரு கடினமான பயணம் என்றார்.
















