fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு…! கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆலோசனை!

2 days lockdown in Karnataka

பெங்களூரு:

ஞாயிற்றுக்கிழமையுடன் சனிக்கிழமையையும் சேர்த்து கர்நாடகத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி முதலமைச்சர் எடியூரப்பா தீவிர ஆலோசனை நடத்தினார்.

கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது.  கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, மாநிலத்தில் தற்போது தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அது தவிர ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை செயல்படுத்துகிறோம். ஆனாலும் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரிக்கிறது. அதனால் அடுத்த ஒரு மாதத்திற்கு சனிக்கிழமை அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தலாமா? என்று அவர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close