fbpx
Others

பிரியங்கா காந்தி–நாட்டிற்காக என் தாய் தனது தாலியை தியாகம் செய்தார்..

நாட்டிற்காக என் தாய் தனது தாலியை தியாகம் செய்தார் - பிரியங்கா காந்திகாங்கிரஸ் கட்சி மக்களிடம் கொள்ளையடித்து, அவர்களின் செல்வங்களை மோசடி செய்வோருக்கு வாரி வழங்கியதாக
குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.இது தொடர்பாக பெங்களூருவில் பேசிய பிரியங்கா காந்தி, “400-க்கும் அதிக இடங்களைகைப்பற்றிஅரசியல்சட்டத்தையேமாற்றிவிடுவோம் என்று பிரதமர் கூறுகிறார் சில சமயங்களில் தன்னை தவறாக பேசுகிறார்கள் என்றும்,   சில சமயங்களில் மதத்தை பற்றியும் அவர் பேசி வருகிறார். உலகின் மதிப்புமிக்க நகரங்களில் வசிக்கும்உங்களுக்கு, இது உண்மையில் தேவை தானா?“காங்கிரஸ் உங்களது தாலி மற்றும் தங்கத்தை அபகரிக்க நினைப்பதாகஅவர்தெரிவித்துள்ளார்.கடந்த 70 ஆண்டுகளாக நாடு சுதந்திரமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தது. யாரேனும் உங்களது தாலியையோ,தங்கத்தையோ திருடியுள்ளார்களா? போரின் போது, இந்திரா காந்தி நாட்டிற்காக தங்கத்தை தானமாக கொடுத்துள்ளார். எனது தாய் நாட்டிற்காக தனது தாலியை தியாகம் செய்துள்ளார்,” என்று தெரிவித்தார். 

Related Articles

Back to top button
Close
Close