Others
முஸ்லிம்கள் மீதுவெறுப்பைதூண்டும்மோடிமீது நீதிமன்றவிசாரணை நடத்தவேண்டும்..
இதுவரை தேர்தல் ஆணையம் பிரதமர் பேச்சின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை என கீ. வீரமணி தெரிவித்துள்ளார் . திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் சட்டப்படி, தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது. அப்படி மத, வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றமாகும் (மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்ட விதி 123(3) செக்ஷன்படி). அப்படி அவற்றைப் பயன்படுத்தி, தேர்தலில் வென்றாலும், அத்தேர்தல் சட்டப்படி செல்லாது என்பதை உச்சநீதிமன்றம் – பல தீர்ப்புகளில்உறுதி செய்துள்ளது.