RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
மெல்போர்ன் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் அங்கிருந்த ரசாயனப் பொருட்கள் வெடித்துச் சிதறின.
பயங்கரமாக பற்றிப் பரவிய தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறுகின்றனர்.
முழுவதுமாக தீயை அணைக்க சில நாட்களாகி விடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். புகை, வெப்பம் காரணமாக அப்பகுதி முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரசாயனக் கசிவால் உடல் நலத்திற்கு ஆபத்து நேரிடுமா என்று விளக்கம் கூற அதிகாரிகள் மறுத்து விட்டனர்.