இந்தியா அசத்தல் வெற்றி!
அடிலெய்டு:
இன்று அடிலெய்டில் துவங்கிய இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடும் இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணியில் ரோகித் சர்மா 43 ரன்னிலும், ஷிகர் தவான் 32 ரன்னிலும், அம்பதி ராயுடு 24 ரன்னில் வெளியேறினர்.
அப்போது, இந்தியா மூன்று விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து இறங்கிய எம்.எஸ்.தோனி கோஹ்லிக்கு ஒத்துழைப்பு அளித்தார். கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடி ஒருநாள் போட்டிகளில் 39வது சதம் அடித்தார்.
இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார்.
அவரை தொடர்ந்து இறங்கிய தினேஷ் கார்த்திக்கும் டோனியும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். டோனி அரை சதமடித்தார்.
இறுதியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடர் 1 – 1 என சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.