GeneralRETamil Newsஅரசியல்இந்தியா
கேரளாவில் மீண்டும் கொரோனா வேட்டை..! ஒரே நாளில் 86 பேர் பாதிப்பு!
86 new corona cases in Kerala

திருவனந்தபுரம்:
கேரளாவில் ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் பற்ற தகவல்களை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு வருகிறார். அதன்படி, புதியதாக 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 86 பேரில் 46 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். 26 பேர் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.
ஒருவர் பலியானதை தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்து உள்ளது. சிகிச்சையில் 774 பேர் உள்ளனர். மொத்தம் 627 பேர் குணமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்து உள்ளார்















