fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

கொரோனா தடுப்பு மருந்து வெற்றி!-அமெரிக்கா அறிவிப்பு!!

USA finds corona medicine

வாஷிங்டன்:

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் 30க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. நூற்றுக்கணக்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நோயாளிகளிடமும், தன்னார்வலர்களிடமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் அது கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆரோக்கியத்துடன் உள்ள 8 தன்னார்வலர்களுக்கு கொடுத்து கடந்த மார்ச் முதல் பரிசோதித்து வந்தது.

மருந்தை பயன்படுத்தியவர்களின் உடல் நலனில் நல்ல  முன்னேற்றம் ஏற்பட்டதால், சாதகமான முடிவு கிடைத்து உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். முதல் கட்டமாக 8 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு 2வது கட்டத்தில் 600 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட உள்ளது.

வரும் ஜூலையில் 3வது கட்டமாக ஆயிரம் பேரிடம் நடத்தப்பட இருக்கிறது. முன்னதாக கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசி, குரங்களுக்கு போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அது தோல்வியில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Back to top button
Close
Close