RETamil NewsTrending Nowஉலகம்
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக சோதனை!
Oxford university found corona vaccine
லண்டன்:
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது.
பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
அந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்த தடுப்பூசியை குரங்குகளுக்கு செலுத்தி சோதித்தது.
அதில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. எந்த பாதிப்பும் அந்த குரங்குகளுக்கு ஏற்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 6 குரங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில், அவை குணமடைந்தன.
இங்கிலாந்தில் மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பார்த்து அதன் முடிவுகளின் அடிப்படையில் இறுதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதாவது இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.