fbpx
RETamil News

சென்னையில் ஆன்லைன் மூலம் டீசல் விற்பனை துவங்கியது

நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் ஆன்லைன் மூலம் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் துவங்கியுள்ளது.

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை அடுத்து ஆன்லைனில் டீசல் விற்பனை செய்வது என்று மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. அதன் அடிப்படையில் நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் ஆன்லைன் மூலம் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் துவங்கியுள்ளது.

இந்த திட்டம் கொளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை மையத்தில் இன்று மாலை முதல் ஆரம்பமானது. முதற்கட்டமாக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close