fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு இல்லை… டிடிவி தினகரன் அறிவிப்பு !

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

18 எம்எல்ஏ-க்கள் வழக்கில் மேல்முறையீடு செய்ய போவதில்லை என்றும் காலியாக 20 தொகுதிகளிலும் தேர்தலை நேரடியாக சந்திக்க தயாராக இருப்பதாகவும் அமமுக-வின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அந்த 18 பேரிடமும், டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அனைவரிடமும் தினகரன் கேட்டார். அப்போது மேல்முறையீடு செய்யவேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர். மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்று ஒரு தரப்பினர் ஆலோசனை தெரிவித்தனர்.

இந்த ஆலோசனையின் அடிப்படையில், தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் டிடிவி தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும், தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர், 20 தொகுதிகளில் நடைபெறும் தேர்தல்களில் ஒரு ஒட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அதிமுக வெற்றி பெறாது என்றார்.

Related Articles

Back to top button
Close
Close