வங்கக்கடலில் உருவான தித்வா புயல் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது மேலும் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நிலவி வருகிறது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து சென்னை – புதுச்சேரி இடையேக் கரையை கடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இன்று (டிசம்பர் 3) ஈரோடு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் மற்றும் சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை , குமரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மழை காரணமாக இதுவரை4பேர்உயிரிழந்திருப்பதாகவும், 582 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை புதுச்சேரி பிராந்தியத்தில் இன்று (டிசம்பர் 3)பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.இதே போல இன்று மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றுநடைபெறவிருந்தசென்னைபல்கலைக்கழகசெமஸ்டர்தேர்வுகளும்ஒத்திவைக்கப்பட்டுள்ளன.மேற்கண்ட 5 மாவட்டங்கள்தவிர்த்துதிருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபம் காரணமாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டாறு திருவிழா காரணமாகவும் இன்று உள்ளூர் விடுமுறை (டிசம்பர் 3) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இந்த 2 மாவட்டங்களில்பள்ளி,கல்லூரிகள்மற்றும்அரசுஅலுவலகங்கள்இயங்காது..