பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது கொரோனா தொற்றுநோயைச் சுற்றியுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தார் என்று அவரது அலுவலக செய்தி மூலம் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,348 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 335 ஐ எட்டியுள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று பில் கேட்ஸுடன் நடந்த தொலைபேசி உரையாடலின் போது, பாகிஸ்தான் “கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் வலுவாக எடுத்து வருகிறது” என்று கூறினார்.
பாகிஸ்தானில்கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் உதவியுள்ளன, என்றும் அவர் தனது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட லாக் டவுன் போன்றவற்றை எடுத்துரைத்தார்.
மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை தலைவரான கேட்ஸ் மற்றும் இம்ரான் கான், கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்தார். இந்த நெருக்கடியின் போது கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் வழங்கிய ஆதரவையும் இம்ரான் கான் பாராட்டினார்.