வேல்துரை எம்.எல்.ஏ. தேர்வு செல்லுபடியாகாது என அறிவிப்பு ; ஊதியத்தை திருப்பி தர உயர் நீதிமன்றம் உத்தரவு
காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சேரன்மகாதேவி தொகுதிக்கு எம்.எல்.ஏ. பதவி வகிப்பதற்கு வேல்துரை போட்டியிட்டிருந்தார். பின்னர் அந்த போட்டியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியும் ஏற்றுக்கொண்டிருந்தார். தற்போது அந்த ஆண்டிற்க்கான வேல்துரையின் எம்.எல்.ஏ. பதவிக்கான தேர்தல் வெற்றி செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை அடுத்து அவர் எம்.எல்.ஏ. பதவிவகித்த அந்த 5 ஆண்டிற்கான சம்பளத்தை திரும்பி செலுத்தும்படி வேல்துரைக்கு சட்டமன்ற செயலாளர் உத்தரவிட்டிருந்தார்.
வேல்துரை அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்ட எம்.எல்.ஏ. உதியத்தினை திருப்பித்தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை அடுத்து அந்த எம்.எல்.ஏ. பெற்ற சம்பளமாக ரூ.21 லட்சத்தி 58 ஆயிரம் பணத்தினை 4 வாரங்களில் திருப்பி செலுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.