RETamil Newsஅரசியல்இந்தியா
அருணாச்சல பிரதேசத்தில் இலேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு
அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள கிழக்கு காமங் உத்தியில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.5-ஆக பதிவாகியுள்ளது. அதிகாலை 4.24 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.