தமிழகத்தை அதிகாலையில் உலுக்கிய 3 மரணங்கள்..! அதிகாரிகள் அதிர்ச்சி
3 More corona death in tamilnadu
சென்னை: கொரோனாவால் சென்னையில் அதிகாலையில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் தினமும் அதிகரித்தபடியே இருக்கிறது. அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இது வரை, 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று காலை சென்னையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அவர்களில் ஒருவருக்கு வயது 56. சென்னை கோயம்பேட்டில் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். மற்றொருவர், தாம்பரத்தைச் சேர்ந்த 78 வயது முதியவர். மற்றொருவர் சூளைமேட்டை சேர்ந்த 80 வயது மூதாட்டி. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்து உள்ளது.
இருப்பினும், தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் கூட்டம் இயல்பாக சாலையில் வலம் வர ஆரம்பித்து உள்ளனர். அதனால், நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.