GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்
லடாக் எல்லையில் தொடரும் லடாய்..! வரும் 6ம் தேதி இந்தியா, சீனா பேச்சு வார்த்தை…!
Bilateral talks between India china on june 6th
டெல்லி:
வரும் 6ம் தேதி லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. லடாக் எல்லையில் சீனா ராணுவப் படைகளை குவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் ராணுவத்தை குவித்தது.
அதன் காரணமாக எஎல்லையில் பதற்றம் நிலவ, இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் அதை மறுத்துள்ளார். இரு நாடுகளின் பிரச்னைகள் பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க முடியும். இப்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றார்.
இந்நிலையில், கிழக்கு லடாக் விவகாரம் தொடர்பாக, இந்தியா-சீனா இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பேச்சுவார்தையின் மூலம் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது.