இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை…! ஒரு ஆச்சர்ய தகவல்!
No causalities in 4 states
டெல்லி:
இந்தியாவில் இந்த 4 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை.
கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா. இறப்பு விகிதம் மற்றும் குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஊரடங்கு, பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்தல், போக்குவரத்து துண்டித்தல் என பல்வேறு வழிகளில் கொரோனாவை வெல்ல இந்தியா போராடி வருகிறது.
இந் நிலையில் மத்திய அரசு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதித்தோரில் 3,731 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,715 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதேபோல இந்த மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கையும் தொடர்ச்சியாக குறைந்த அளவில் உள்ளது. குறிப்பாக சிக்கிம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்து ஆகிய 4 மாநிலங்களில் இறப்புகளே இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.