கைகள் கட்டப்பட்டு, அரை நிர்வாண கோலத்தில் ரோட்டில் கிடந்த மருத்துவர்…!
Suspended Andhra doctor creates ruckus on National Highway
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநில மருத்துவர் ஒருவர், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகபட்டிணம் மாவட்டம் நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சுதாகர். தாம் பணிபுரிந்த மருத்துவமனையில் போதுமான கொரோனா தடுப்பு முகக் கவசங்கள், ஆடைகள் இல்லை என்று குற்றம்சாட்டினார்.
ஒரு கட்டத்தில் அதற்காகவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர் சுதாகர் காயமான நிலையில், நரசிபட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் கிடந்துள்ளார்.
பின்னர்,போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அங்கு மருத்துவர் அடிக்கடி மனரீதியாக பாதிக்கப்பட்டவராக நடந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து, அவரை கிங் ஜார்ஜ் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுதாகர் மது போதையில் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.