fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

மீண்டும் சுங்கக் கட்டணம்!மத்திய அரசின் அடுத்த ஆப்பு!

ஊரடங்கால்  சுங்கக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக  ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் அவற்றுக்கு இப்போது வரை சுங்கக்கட்டணம்  வசூலிக்கவில்லை..

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட இருக்கும் நிலையில் மீண்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைகள் துறை  தெரிவித்துள்ளது.

மிகுந்த  நிதிச்சுமை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மட்டுமே தற்போது சென்று கொண்டிருப்பதால் அவற்றுக்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பது சரியல்ல என அகில இந்திய மோட்டார்  டிரான்ஸ்போர்ட் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close