கொரோனா போரில் நமக்கு தான் வெற்றி…! பிரதமர் மோடி பேச்சு!
PM modi about corona war
பெங்களூரு:
கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவது உறுதி என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக வெள்ளி விழா கொண்டாட்டங்களை பிரதமர் மோடி இன்று துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
வைரஸ் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியாக இருக்கலாம். ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் வெல்ல முடியாதவர்கள். இந்த போரில், நமது மருத்துவ ஊழியர்கள் வெற்றி பெறுவது உறுதி. ஆயுஷ்மான் திட்டம் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம்.
1 கோடி மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். பெண்கள், கிராமங்களில் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தின் முக்கியப் பயனாளிகள். 22 எய்ம்ஸ் அமைப்பதில் நாடு விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
5 ஆண்டுகளில், மருத்துவப்படிப்பில் 30,000 இடங்களையும், முதுகலை பட்டப்படிப்பில் 15,000 இடங்களையும் கூடுதலாக சேர்த்துள்ளோம். சுகாதார ஊழியர்களை தாக்குவது என்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் கூறினார்.