24 மணிநேரத்தில் ரூ. 5 லட்சம் வசூல்…! கொரோனாவால் மட்டுமே சாத்தியம்..!
Rs. 5 lakh penalty in last 24 hours corona lockdown
சென்னை: ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் யாரும் அதை பொருத்தப்படுவதே இல்லை. காவல்துறையின் வாகன நடவடிக்கைகளில் இது தெளிவாகவே தெரிகிறது. ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 5 லட்சம் ருபாய் அபராதம் வசூலாகி உள்ளது.
இது குறித்து தமிழக காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 24 மணி நேரத்தில் 5434 பேர் கைதாகி, 3,75,792 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
24 மணி நேரத்தில் 5,993 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,28,015 வழக்குகள் பதிவாகி, ரூ.4,91,79,379 கோடி அபராதமும் வசூல் செய்யப்பட்டு உள்ளது. வாகன உரிமையாளர்களுக்கு தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் திரும்ப தரப்படுகின்றன. அப்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை கொண்டு வந்து வாகனத்தை எடுத்துச் செல்லலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.