கொரோனா நெகட்டிவ்… ஆனால் நோயாளி மரணம்…! பீதியில் திருவண்ணாமலை
First corona causality dead in thiruvannamalai
திருவண்ணாமலை: கிரிவல மாவட்டமான திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
அம்மாவட்டத்தின் ஆரணி நகரைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவரது மகன் டெல்லி சென்று வந்துள்ளார். அவருக்கு உடனடியாக பரிசோதனை நடத்திய போது கொரோனா இல்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது அந்த இளைஞரின் தாயாருக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு 4 மற்றும் 5வது பரிசோதனையில் கொரோனா இல்லை என்று முடிவுகள் வெளியாகின.
இதையடுத்து அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் நேற்று நள்ளிரவு அப்பெண் இறந்துள்ளார். தீவிர சிகிச்சைக்குச் செல்லாமலே அதுவும், குணமானதாக வீட்டுக்கு அனுப்ப இருந்த நிலையில் பலியாகி உள்ளது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.