fbpx
Others

செங்குன்றம்—-சிமெண்ட் கலவை தொழிற்சாலைக்கு சீல்…!

செங்குன்றம் அருகே உள்ள தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி சோத்துப்பாக்கம் சாலையில் தனியார் சிமெண்ட் ஜல்லி கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது இந்த தொழிற்சாலைகளால் சுற்றுவட்டார பகுதிகள் மாசுபடுவதோடு சாலைகளில் ஜல்லிகள் சிதறி வாகனங்கள் விபத்து ஏற்பட்டு வந்தது பொதுமக்கள் கண் எரிச்சல் சுவாசக் கோளாறுகளால் அவதிப்படும் சூழ்நிலை உருவானது இந்த தொழிற்சாலைகளை அகற்றக்கோரி ஊராட்சி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடமும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு கொடுத்தனர். அதனை அடுத்து புழல் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி பாஸ்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் ஆகியோர் கம்பெனியை நேரில் ஆய்வு செய்து அரசு உரிய அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டு வருவதை அறிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.இதேபோல் மேலும் இரண்டு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது அதனையும் விரைவில் சீல் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close