ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
சென்னையில் ஜாலியாக சுற்றியவர்கள்…! 100க்கும் மேற்பட்ட வாகனங்களை அள்ளிய போலீஸ்!
100 bikes seized in Chennai
சென்னை:
முழு ஊரடங்கை கண்டுகொள்ளாமல் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்தவர்களை போலீஸார் பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா உச்சத்தில் உள்ளது. ஆகையால் இந்த மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு கடும் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக பலத்த கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இந் நிலையில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் வழக்கமான நாட்களை போலவே மக்கள் ஊர் சுற்ற ஆரம்பித்து இருக்கின்றனர்.
அதையறிந்த போலீசார் அ;ஙகு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காலாவதியான பாஸ் வைத்திருந்தவர்கள், காரணமின்றி வெளியே வந்தவர்களின்100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.