கலவை–பெண்இன்ஸ்பெக்டர்கவிதா ஆயுதப்படைக்கு மாற்றம் எஸ்பி அதிரடி உத்தரவு..

கலவை பெண் இன்ஸ்பெக்டர் மீது பல்வேறு புகார்கள் காரணமாக அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி அய்மன்ஜமான் உத்தரவிட்டுள்ளார்.சொத்து பிரச்னை, பணம் கொடுக்கல் வாங் கல், நிலத்தகராறு உள் ளிட்ட சிவில் வழக்குகள் குறித்து காவல் நிலையத் தில் விசாரணை நடத்தக்கூ டாது. புகார் மட்டும் பதிவு செய்யலாம். அதேநேரத் தில் இது தொடர்பாக அடிதடி தகராறு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் விசாரணை நடத்தலாம் என்றுஅறிவு றுத்தப்பட்டுள்ளது.ஆனால் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலை யத்திற்கு வரும் இப்புகார்கள் மீது விசாரணை நடத்துவதாக, பாதிக்கப் பட்டவர்கள் மாவட்ட காவல்துறைக்கு புகார் அனுப்பியுள்ளனர். மேலும்இங்குஇன்ஸ்பெக்டராக இருக்கும் கவிதா மீது பல் வேறு புகார்கள் மாவட்ட காவல்துறைக்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து புகார்கள் குறித்து எஸ்பி அய்மன்ஜமால் விசாரணை நடத்தினார். இதை யடுத்து கலவை இன்ஸ் பெக்டர் கவிதாவை, நேற்று ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்..