fbpx
RETamil Newsஉலகம்

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததால் பதற்றம்

உலகையே புரட்டிபோட்டுக்கொண்டிருக்கும் கொரோனாவால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அமெரிக்காதான் உலகிலேயே கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்புகளையும் , பாதிப்பையும் கொண்ட நாடாக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டும் நிலையில் உள்ளது. இது மற்ற நாடுகளை பார்க்கும் போது எண்ணிக்கையில் மிகவும் கூடுதல் ஆகும். அதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதேபோல் 8 லட்சத்தி 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இஸ்பெயின் நாட்டை விட 4 மடங்கு அதிகமாகும்.

உலக அளவில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் உயிரிழப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கும் நிலையில் உள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் இந்த தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதும் ,அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் உலக மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close