fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

துபாய் தமிழர்களை அழைத்து வந்த வந்தே பாரத்…! தமிழகத்துக்கு 4 சிறப்பு விமானங்கள் தயார்!

Corona impact: tamilians dubai returning home by vande bharat

துபாய்:

வந்தே பாரத் திட்டத்தின் முதல் கட்டமாக ஏராளமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம்  அழைத்து வரப்பட்டனர்.

தமிழகத்திற்கு துபாயிலிருந்து 2 விமானங்கள் இயக்கப்பட்டது .இது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் ஆனால் 2வது கட்ட நடவடிக்கையில் தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களில், ஊர் திரும்ப‌ ஆயிரக்கணக்கானோர் இந்திய‌ அரசு வலை தளைங்களில் பதிவு செய்தவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதனையடுத்து தற்போது 3வது கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 4 சிறப்பு விமானங்கள் துபாயிலிருந்து இயக்கப்பட உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை என 4 விமான நிலையங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close