Tamil Newsஅரசியல்இந்தியா
ஊழலுக்கு எதிராக .நான் நடவடிக்கை எடுப்பதால் சிலருக்கு என்னை பிடிக்காது- பிரதமர் மோடி

யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர்ஹேவிலியில் மருத்துவ கல்லூரி தொடக்க விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;
ஊழலுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுப்பதால் சிலருக்கு என் மீது கோபம் இருக்கிறது. ஏனென்றால் மக்களின் பணத்தை சுரண்டுவதை நான் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டேன். மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை நான் தடுத்துவிட்டதால் எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக கூட்டணி அமைத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த கூட்டணியில் முழுமையான ஒருங்கிணைப்பின்றி தொகுதி பங்கீட்டிற்கு பேரம் பேசுகின்றனர். மேலும் ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் கோபமடைந்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டணியை அமைத்து ஒரு பிரம்மாண்ட மாநாட்டை உருவாக்கி நடத்துகின்றனர்.
இவ்வாறு அவர் அந்த விழாவில் கலந்துகொண்டு பேசினார்.















