ரஷ்ய உளவுத்துறை கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!
கோவிட் -19 தடுப்பூசியைத் கண்டுபிடிக்கும்ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தகவல்களைத் திருட ரஷ்யா முயற்சித்து வருவதாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா தெரிவித்துள்ளன. ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதி என கூறப்படும் ஏபிடி 29 (APT 29) ஹேக்கிங் குழு கொரோனா வைரஸ் தடுப்பூசி வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களைத் தாக்குகிறது என்று மூன்று நாடுகளும் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த அறிவிப்பை , பிரிட்டனின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் வெளியிட்டது. இது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. தொடர்ச்சியான தாக்குதல்கள் புலனாய்வு அதிகாரிகளால் ஆராய்ச்சியை சீர்குலைப்பதை விட அறிவுசார் சொத்துக்களை திருடும் முயற்சியாக இது பார்க்கப்படுகிகிறது.
“கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவோரை ரஷ்ய உளவுத்துறை குறிவைக்கிறது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறினார்.
இதையடுத்து,தேசிய சைபர் பாதுகாப்பு மையம் கூற்றுப்படி, எந்தவொரு தகவலும் உண்மையில் திருடப்பட்டதா என்பது தெரியவில்லை, ஆனால் தனிநபர்களின் ரகசிய தகவல்கள் சமரசம் செய்யப்பட்டதாக நம்பப்படவில்லை என்று கூறுகிறது.