fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

ஜம்முகாஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..! பாதுகாப்பு படையினர் அதிரடி!

3 Terrorists killed in jammu Kashmir

அனந்த்நாக்:

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

குல்ச்சோகர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு  தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு  பாதுகாப்பு படையினர் தேட ஆரம்பித்தனர்.

அப்போது, அங்கே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தியதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பலியான தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினருடன் தாக்குதலில் இணைந்திருந்தனர்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close