fbpx
RETamil News

ஊரடங்கு தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு மக்களை அடைக்க முடியும்? ப.சிதம்பரம்!

எந்த வித முன்னெச்சரிக்கையும் இன்றி, வேற்று மாநில தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்ல அவகாசம் கூட கொடுக்காமல் திடீரென மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு  கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு பொது மக்களை அடைக்க முடியும்? என்று தனது டுவிட்டரில்  நச்சென்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டரில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது.

தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு அந்த வாய்ப்பினை அரசு கொடுக்க  வேண்டும்.

வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாராலும் முடியாது.

தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? என்று ட்வீட்  செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close