சுத்தி, சுத்தி அடிக்கும் கொரோனா….! டிஜிபி அலுவலகத்தில் 8 பேர் அட்மிட்…!
8 New corona cases in DGP office
சென்னை: சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
சென்னை மாநகரில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் பரவல் குறையவில்லை.
வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தந்தை, மகன் மற்றும் 12 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
சவுக்கார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் அம்மா உணவக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக இதுவரை 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சூளைமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.