7-ஆம் தேதி தலைமை செயலகம் முன் வந்தே மாதரம் பாடலை பாடுவேன் – சிவராஜ்சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தின் முந்தைய பாஜக ஆட்சியில் முதல்மந்திரியாக இருந்த சிவராஜ்சிங் சவுகான் , தலைமை செயலக ஊழியர்களுக்கு , ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் வந்தே மாதரம் பாடலை ஒலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் தற்போது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதல்-மந்திரியாக கமல்நாத் செயல்பட்டு வருகிறார். எனவே முந்தய ஆட்சியின் அந்த உத்தரவை தற்போது முதல்-மந்திரியாக உள்ள கமல்நாத் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சிவராஜ்சிங் சவுகான் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
முந்தைய ஆட்சியில் இருந்த மரபான முறையை மாற்றியது வருத்தப்படக்கூடியதாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி அந்த மரபான முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் அவ்வாறு கொண்டு வரவில்லையெனில் வர இருக்கும் 7-ஆம் தேதி தலைமை செயலகம் முன்பாக 109 எம்.எல் .ஏ க்களுடன் வந்தே மாதரம் பாடலை பாடுவேன் என்று கூறினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியானா கமல்நாத் அரசு வந்தே மாதரம் பாடலை மீண்டும் ஒலிக்க செய்ய வேண்டும் என்று பாஜக கட்சியின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.















