fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

பிளஸ்-1 தேர்வு முடிவு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்..! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

Plus 1 results this month says minister sengottaiyan

கோபிசெட்டிபாளையம்:

பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 7 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக மருத்துவ குழுவினரே பாராட்டி உள்ளனர். விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவான ஏரி, குளங்களை நிரப்பும், அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றி உள்ளார்.

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. பிளஸ்-2 வகுப்பில் விடுபட்ட பொதுத்தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும்.

எஞ்சியுள்ள மாணவர்களும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கும் தேர்வு நடத்திட அரசு தயாராக உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் வெளியிடப்படும். பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close